Archive for 2012

இரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி

சமீபத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நக்ஸலைட்டு பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கூட்டத்திலிருந்து பிஹெச்.டி பட்ட மாணவி வில்கா என்பவர், தங்களுக்கு பேச்சு உரிமை வேண்டுமென கூச்சலிட்டார்.. காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயல, சிதம்பரம் அவரைப் பேச அனுமதித்தார். அந்தப் பெண் "மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரம் கொடுத்து உள்ளது ஏன்?. சாதாரண மக்கள் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரோம் சர்மிளா போன்ற காந்தியவாதிகள் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டது ஏன்?" என்ற கேள்விக்கு, "என்.டி.ஏ. அரசாங்கம் ஆயுதப்படைக்கு அதிக அதிகாரம் கொடுத்தார்கள், நாங்கள் அவ்வதிகாரத்தை தொடர்வதா இலலை திரும்பப் பெறுவதா என்று யோசித்து வருகிறோம்" என்றார்.

யார் இந்த இரோம் சர்மிளா என்பதை அறியும் முன்பு பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டால் நல்லது.

1949 –ல் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த சிறு சிறு அரசர்கள் ஆண்ட தன்னாட்சி பகுதிகளை அப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மதிக்காமல், இந்தியாவுடன் சேர்க்கும் பொழுது அந்தப் பகுதி மக்களிடையே மனக்கசப்பு. ஏற்பட்டது . அதுவே அப்பகுதிகளின் மக்களிடையே தனித்தனியே தனிநாடு கிளர்ச்சிக்கு வித்திட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், நாகா கிளர்ச்சி இந்தியாவின் விடுதலை காலத்திற்கும் முற்பட்டது என்றாலும் விடுதலைக்குப் பின் தனிநாடு கோரும் நாகா கிளர்ச்சி பிற வடகிழக்கு மாகாணங்களான மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் போல் பரவியது. அது பெருவியாதியாக வளர்ந்து 1980 வாக்கில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனி கிளர்ச்சி அமைப்புகள் ஏற்பட்டன.


மணிபபூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மித்திஸ்,பன்கல்ஸ்,நாகா, குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்க முடிவில், நாடு விடுதலை அடைந்தபோது, மணிபபூர் மாநிலத்தில் புதிதாக வளர்ச்சி அடைந்த நடுத்தர, படித்த மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்பினார்கள். நமது அரசியல்வாதிகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மையினால் அவர்களே மணிப்பூர் தனிநாடாகப் பிரிந்து செல்லும் கிளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தக் காரணமாக மாறிவிட்டார்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் கிளர்ச்சி அமைப்புகளை அடக்க 1958 செப்டம்பர் 11-ல் இந்தியா, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் ஒன்றை இயற்றியது . அதனை, தொந்தரவு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா,மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது. இந்த சட்டம் பின்வரும் சிறப்பு அதிகாரத்தினை ஆயுதப்படைக்கு வழங்குகிறது

1.சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள கூட்டத்திற்கு எதிராக, உயிரைப் பறிக்கும் ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தலாம். படையைப் பயன்படுத்தலாம். அந்த நடவடிக்கையில் உயிர்கள் பலி ஆகலாம்.

2.வாரண்ட் இல்லாமல் சந்தேகப்படுபவரை, ஆயுதம் வைத்திருப்போரைக் கைது செய்யலாம்.

3.எந்த இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்



இதைவிடக் கொடுமை, ராணுவ ஆத்துமீறலுக்காக ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாத வகையில் இந்த சட்டத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஷரத்து உள்ளது..இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இரோம் சர்மிளா சானு எனும் காந்தியவாதி மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இரோம் நந்த சிங் என்ற தந்தைக்கும் இரோம் சக்தி தேவி என்ற தாய்க்கும் ஒன்பதாவது கடைசிப் பிள்ளையாக 1972-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்ல வாய்ப்பு கிடைக்காததால் பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பாடங்களைப் படித்து பட்டயம் பெற்றார்.

2000 ஆண்டு நவம்பர் 1 அன்று , மணிப்பூர் மாநிலத்தில் மலோம் எனுமிடத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர் .இந்திய அரசின் பாரா மிலிட்டரியின் ஒரு படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ், தங்களது வாகனத்தில் வந்து இறங்கி, பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது எந்த எச்சரிக்கையும் எந்தக் காரணமும் சொலலாமல் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள் .அந்த துப்பாக்கிச் சூட்டில் 10 நபர்கள் பலியானார்கள். அவர்களில் 62 வயதான மூதாட்டியும், 1988 –ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை பட்டம் வாங்கிய 18 வயதான சீனம் சந்திரமணியும் அடங்குவார்கள். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட மணிப்பூர் மக்கள் அன்றே தெருவுக்கு வந்து நடந்த நிகழ்வின் மீது நீதிவிசாரணை வேண்டுமென்று போராடினார்கள். ஆனால் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958 னைப் பயன்படுத்தி அரசாங்கமும் ராணுவமும் விசாரணை கமிஷன் அமைப்பதில் இருந்து தப்பித்துக் கொண்டன.

தனிச்சுற்றுக்கு விடப்பட்ட குறுந்தகடு ஒன்றில் குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்கள், வயதானவர்கள் ஆகியோரைத் தெருவுக்கு இழுத்து வந்து, கண்ணீர்ப் புகை குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், ஆண்களை மண்டியிட வைத்து, தலைக்கு மேல் துப்பாக்கியினை வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றன.

மலோம் நிகழ்வால் மனம் புழுங்கிய இரோம் சர்மிளா தனது 28வது வயதில், 2000ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தனது தாயினை வணங்கி அவரது வாழ்த்துடன் மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தின் அடக்குமுறைக்கு மூலகாரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை மகாத்மா காந்தி வழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.இவருடைய உண்ணாநிலையினை முதலில் சிலர் கிணடலும் கேலியும் செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தனது உண்ணாநிலையினைத் தொடர்ந்தார் சர்மிளா. அவர் உண்ணாநிலை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 6 ஆம் நாள், இந்திய தண்டனைச் சட்டம் IPC பிரிவு 309யின் படி சர்மிளா தற்கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு, பின்பு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அந்நிலையிலும் சர்மிளா உண்ணாநிலையினைத் தொடரவே, காவலில் இருக்கும்போது அவர் இறந்து விடக்கூடாதே எனும் பயத்தில் விட்டமின் போன்ற சத்துப் பொருட்களை கரைத்த நீரை அவரது மூக்கு வழியாக ஒரு குழாயைப் பயன்படுத்தி அவரது விருப்பததுக்கு மாறாக ஊற்றி அவரை உயிரைப் பிடித்து வைக்கிறார்கள். இந்திய தண்டனை சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான வழங்கவியலும் என்பதால் அவரை அரசு விடுதலை செய்வதும் உடனே சர்மிளா தனது உண்ணாநிலையினைத் தொடர்வதும் மாறிமாறி நடந்துவருகின்றன.

அவ்வாறு சர்மிளா ஒரு தடவை மணிப்பூர் அரசால் விடுதலை செய்யப்பட்டபோது, அவர் சில அமைப்புகளின் உதவியுடன் மணிப்பூர் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புது தில்லிக்கு வந்தார். தில்லியை அடைந்தவுடன் முதல் வேலையாக தனது குருவான மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டை அடைந்து, அண்ணலுக்கு மலர் மாலை வைத்து தனது மரியாதையினைச் செலுத்தினார். அன்று மாலையே ஜந்தர்மந்தரிலிருந்து தனது அகிம்சா போராட்டத்தை தொடாந்தார். மெல்லிய குரலில் இந்தப் போராட்டம் ஆயதப் படை சட்டத்திற்கான தனது எதிர்ப்பை தெரிவிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் நடத்துவதாக சர்மிளா கூறினார். அவர் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்வீரர்கள் ஆகியோர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். தில்லி அரசு விழித்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாக அன்று நள்ளிரவில் சர்மிளாவைக் கைது செய்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. எய்ம்ஸ் மருத்துவமணையில் சர்மிளா கிகிச்சை காவலில் இருக்கையில் அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்ற அமைப்பைச் சார்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான மிஸஸ். இபடி (Ms.Ebadi)என்பவர் சர்மிளாவைச் சந்தித்தார். சர்மிளாவின் போராட்டத்திற்கு அவரது ஆதரவைத் தெரிவித்தார்.மேலும் சர்மிளா இறந்துவிட்டால் நாடாளுமன்றம், நீதிமன்றம், ராணுவம், நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஒவ்வொரு பத்திரிகையாளரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததால் அவரது இறப்புக்கு காரணமானவர்களாகக் கூடும் எனவும் தெரிவித்தார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் பத்தாவது ஆண்டாக அவரது உண்ணாநிலை தொடர்கிறார். அவர் தனது கூந்தலைப் பின்னி முடிப்பதையும் விட்டு விட்டார். பற்களைப் பருத்தி துணியால் துடைத்து கொள்கிறார். உதட்டை ஸ்பிரிட் கொண்டு துடைத்துக் கொள்கிறார். தினமும் 4 லிருந்து 5 மணி நேரம் தானே கற்றுக் கொண்ட யோகாவை மேற்கொள்கிறார். யோகா மூலம் அவரது உடலையும் மனதையும் ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவதாகவும் சொல்கிறார். தொடர்ந்து உண்ணாமல் இருப்பதால் அவருக்கு மாதவிடாய் சுழற்சிகூட சீக்கிரமாக நின்றுவிட்டது. இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் சர்மிளா பத்து ஆண்டாக உண்ணாநிலை மேற்கொண்டு உயிர் வாழ்வது மருத்துவ உலகில் பெரும் அதிசயம் என கூறுகிறார்கள். சர்மிளா தன்னை வந்து காண்பவர்களிடம் தான் சாதாரணமாக இருப்பதாகவும் தான் அவரது உடம்புக்கு எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை எனவும் .இது தண்டனையும் இல்லை, தனது கடமையைத்தான் செய்வதாகவும் நாளை என்ன நடக்கும் என்று தனக்குத் தெரியாது எனவும், நேரம் தவறாமை, ஒழுக்கம், பெரும் முயற்சி பெரும் வெற்றியைத் தரும் என தனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டதாக சர்மிளா கூறுகிறார்.

சிறுசிறு குற்றங்களைச் செய்த ஒரு குற்றவாளியைப் போல் இம்பால் மருத்துவமனையில் அழுக்கு குப்பைக்கூளமான ஒரு மருத்துவ வார்டில் சத்துநீர் அனுப்ப மூக்கில் குழாய் சொருகப்பட்ட நிலையில் அரைஉயிராய்க் கிடக்கிறார் இரோம் சர்மிளா சானு. சட்டத்தில் எந்த அதிகாரமும் நியாயமும் இல்லாவிட்டாலும் இவரைக் காண யாரையும் மணிப்பூர் அரசு அனுமதிப்பதில்லை.

சர்மிளாவை பற்றி திரைப்படம் எடுக்கும் கவிதா ஜோஷி என்பவர், சர்மிளாவின் தாயாரைப் பேட்டி கண்டபொழுது, அப்போது அவரது தாயார், சர்மிளாவை பார்த்தால் அவர் அழுதுவிடுவார் என்றும் . சர்மிளாவின் கோரிக்கை நிறைவேறும் வரை அவளது உண்ணாநிலையை அவள் கைவிடப்போவதில்லை என்றும், 5 நாட்களுக்கு மட்டுமாவது இந்தக் கொடுமையான ஆயுதப்படை சட்டம் விலக்கிக் கொண்டால்கூட அவரது மகள் சர்மிளாவுக்கு ஸ்பூன் மூலம் கொஞ்சம் அரிசி கஞ்சி கொடுப்பேன்.அதற்குப் பின் சர்மிளா இறந்து போனால் கூட அவளது ஆசை நிறைவேறியதே என்ற நிம்மதியாவது அடைவேன் என்று தெரிவித்து உள்ளார்.

2005 –ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கெளஹாத்தியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு சர்மிளாவின் பெயரைப் பரிந்துரைத்தது. 2007ஆம் ஆண்டு, தென் கொரிய நாட்டு கெவஞ்சு மனித உரிமை பரிசினைப் பெற்றார். (Gwangju prize for Human Rights,). 4.10.2010 ல் சர்மிளா ஆயுதப் படை சட்டத்திற்கு எதிரான உணணாநிலை போராட்டம் தொடங்கி பத்தாவது ஆண்டு நிறைவுக்கு வருவதைச் சிறப்பிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு, சர்மிளாவின் பெயரை இந்திய அறிவியல், பகுத்தறிவு மற்றும் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தடைசெய்யபட்ட மக்கள் விடுதலை படை(People liberation Army) உறுப்பினர் என்று சொல்லப்பட்ட 32 வயதான மனோரமா தேவி என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைது சென்று அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் கழிதது, மனோரமா தேவியின் உடல் இம்பால் நகரின் குப்பை கொட்டும் இடத்தில் கற்பழிக்கப்பட்டு ரத்தக்காயங்களுடன் கிடந்தது. இதனைக் கண்டு பெரும் கோபத்திற்கு உள்ளான 30க்கும் மேற்பட்ட சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் 2004 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் அமைந்துள்ள கன்கலா கோட்டை எதிரே குழுமி தங்களது ஆடைகளைத் துறந்து அம்மண நிலையில் "இந்திய ராணுவமே, எங்களைக் கற்பழி " என்று கூச்சலிட்டவாறு போராடினார்கள். மணிப்பூர் அரசு உடனே அவர்களைக் கைது செய்து, மூன்றாண்டு சிறைத்தண்டனை வாங்கித் தந்தது. மனோரமா தேவி கொலையினை விசாரிக்க அமைக்கப்பட்ட உபேந்திரா விசாரனை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை இன்னும் மக்கள் அறிய வெளியிடவில்லை.

மனோரமா தேவியின் மரணம், சர்மிளா சானுவின் சாகும வரையிலான உண்ணாநிலை போன்றவை மத்திய அரசைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன்ரெட்டி அவர்களின் தலைமையில் ஆயுதப்படை(சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958னை மறுஆய்வு செய்ய கமிஷன் ஒன்று அமைத்தது. சூன் 6, 2005-ல் அந்த கமிஷன் தனது அறிக்கையினை வெளியிட்டது. ஆனால் கமிஷனின் அறிக்கையின் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அவ்வமயம் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப்முகர்ஜி ஆயுதப்படைக்கு இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரமில்லை என்றால் தொந்தரவான பகுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்கவியலாது என்று கூறினார். டிசம்பர் 2006-ல் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மணிப்பூர் மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று ஜீவன் ரெட்டி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகளை மதிக்கும் வகையில், ஆயுதப்படை சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையர் திரு நவநீதம் பிள்ளை ஆயுதப் படை (சிறப்பு அதிகார சட்டம்) 1958, காலனி ஆதிக்க கால சட்டம் போன்றது. சர்வதேச அளவில பேணப்படும் மனித உரிமை தரத்துக்கு இது முரண்பாடானது என தெரிவித்து உள்ளார்.

இன்று வரை உள்துறை அமைச்சர் இச்சட்டததை நீக்குவதா அல்லது திருத்தம் கொண்டு வருவதா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஒரே ஆறுதலான நிகழ்வு என்னவென்றால் மத்திய அரசின் எதிர்ப்பினையும் மீறி, மணிப்பூர் அரசு, மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958 யினை விலக்கிக் கொண்டது.

அண்ணலால் விடுதலை அடைந்த மக்களாட்சி நடக்கும் இந்தியத் திருநாட்டில், மகாத்மா காந்தி காட்டிய அகிம்சா வழியில் சர்மிளா போராடினாலும் அவர் இம்பால் மருத்துவமனை வார்டில் முடங்கிக் கிடக்கத்தான் வேண்டி உள்ளது. நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலிம் ( ஐசக் மற்றும் முய்வா) இயக்கத்தின் கோரிக்கையான "கிரேட்டர் நாகாலாந்து" கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசு செவி சாய்த்து உள்ளது போல், இரோம் சர்மிளாவின கோரிக்கையான மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சட்டம், இரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் 10 ஆண்டு நிறைவு செய்வதற்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என வாழ்த்துவோம்.
நன்றி - உயிர்மை
 சார்மிளாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

வளர்ந்துவரும் உலக பொருளாதார மயமாக்கல் தான் அரசுக்கு முக்கியம் போல, அதற்காக நாட்டை கம்யூனிஸமாக்க சொல்லவில்லை, முதலாளிதுவமும் விரும்பத்தக்கதல்ல, ஒவ்வொரு மனிதனும் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு உலகில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி உயிர்மை

சார்மிளாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

Tuesday, May 1, 2012
Posted by Blogger

மீண்டும் டெசோ -கருணாநிதி வீரவசனம்


இதோ இன்னும் ஒரு எடுத்துகாட்டு ...

தமிழ்நாட்டில் 1980களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது

சீமானை தவிர வேறு ஒருவரும் இதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்கவில்லை 

தமிழனின் வீரம் அரும்காட்சியகத்தில் வைத்து பூட்ட பட்டதை நன்கு தெளிவு படுத்துகிறது 

ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழகர் மாண்டு கொண்டு இருக்கும்  போது பத்து நிமிடம் உண்ணாநிலை இருந்தவர் தானே?


அப்போது ஆரம்பிக்க வேண்டியது தானே?

இப்பொழுது மட்டும் எங்கிருந்து தமிழ் உணர்வு பொங்கி கொண்டு வந்தது?   

இது புதுகோட்டை தேர்தலுக்கு ஆயத்தமோ? 
  
Saturday, April 28, 2012
Posted by Blogger

யார் இந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்





கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் (வயது 32), சொந்த ஊர் வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரம்.இவரது தந்தை ஏ.வரதாஸ். ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். தாய் கங்காதேவி. இவர்கள் பாளை தியாகராஜநகர் அருகே உள்ள ராம்நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். அலெக்ஸ் பால் மேனனின் தங்கை மெர்லின் ஜுலியட். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் பாளையை சேர்ந்த புஷ்ப பாக்கியம் என்ற ஆஷா என்பவருக்கும் அலெக்ஸ் பால் மேனனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இருவரும் சத்தீஸ்கரில் வசித்து வந்தனர். ஆஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அலெக்ஸ் பால் மேனனின் தாய் கங்காதேவி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியவர். தனது மகனையும் கலெக்டர் ஆக்கி ஏழைகளுக்கு சேவை செய்ய வைக்க வேண்டும் என எண்ணியிருந்தார். இதை அடிக்கடி தனது மகனிடம் கூறுவாராம். இந்த நிலையில் அலெக்ஸ் பால் மேனன் 10-ம் வகுப்பு படிக்கும் போதே தாய் கங்காதேவி இறந்து விட்டார்.


தாயின் கனவை நனவாக்க கலெக்டர் ஆகி சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பால் மேனன் தீவிரமாக படித்தார். பாளை ரோஸ்மேரி மெட்ரிக்பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த அலெக்ஸ் பால் மேனன் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு முடித்தார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதலில் ஐ.ஆர்.எப். தேர்ச்சி பெற்றார். 2006-ம் ஆண்டு ஐ..எஸ்.தேர்வு எழுதி தமிழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவரது சிறப்பான பணிக்காக மாநில அரசிடம் இருந்து 3 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்க மனமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர் அலெக்ஸ். திரைப்படங்கள் மீது நல்ல ஆர்வம் கொண்டவர். ஜப் வி மெட், ஹோலி ஸ்மோக், சுப்பிரமணியபுரம் ஆகியவை இவர் ரசித்துப் பார்த்த சில படங்களாம்.மக்களுக்கு உதவாத சட்டங்கள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் கூட இவர் விரக்தியுடன் எழுதியுள்ளார். கலை, திரைப்படம், இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லீனா மணிமேகலையும், சாரு நிவேதிதாவும்.


இவரது பெயரைப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் சட்டென புரிபடும். அதுதான் இவரது பெயருடன் இணைந்துள்ள மேனன். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எனக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு்த்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணன் மேனன் மீது நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் எனது மகன் பெயரில் மேனன் என்ற பெயரைச் சேர்த்தேன் என்றார்.
அலெக்ஸ் பால் மேனனுக்குப் பிடித்த ஒரு மிகப் பெரிய போராளி - சேகுவரா. மாவோயிஸ்டுகள் போன்றோருக்கும் கூட சேர மிகவும் பிடித்தவர்தான்..


அப்படிப்பட்ட ஒரு கலக்டர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால்  கடத்தப்பட்டார்.இதை கண்டித்து சுக்மா மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தபட்டது


இவர் ஏன் கடத்தப்பட்டார்? .நல்லது செய்தார்.என்னது அது?

அரசின் பல திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.மக்களுக்கு கல்வி அறிவு புகட்டினார்.இதனால் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு மக்களிடையே சரிந்தது.
இவரை போல் நல்ல கலக்டர் நாட்டிற்கு மிக அவசியம்.மத்திய-
மாநில அரசே போர்கால நடவடிக்கை எடு.




Sunday, April 22, 2012
Posted by Blogger

Popular Post

- Copyright © 2013 கல்யாணகுமார் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -