ஏர்‌டெல் மற்றும் சத்யாபால் நிறுவன வவுச்சுர் ஃப்ராட்



எமது நண்பர் ஒருவருக்கு ஏர்‌டெல் நிறுவனம் வவுசுர் ஒன்றை அனுப்பி இருந்தனர்.அதன் மதிப்பு ௫5௦௦௦ .இதை கொண்டு நீங்கள் சத்யா பால் நிறுவனத்திடம்' இருந்து ௫5௦௦௦ மதிப்புள்ள பொருளை பெறலாம் என்றும் இருந்தது.

 சத்யா பால் வெப்‌ஸைட் சென்று பார்த்தால் அங்கு இருந்ததோ வேறு ஒன்று.௫5௦௦௦ மதிப்பிற்கு ஒரே ஒரு டை மட்டுமே வாங்க முதியும்.அந்த டையின்
 மதிப்பு வெறும் ௫5௦௦ ரூபாய் கூட பெறாது.

இதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதோ,வேறு எங்கும் இல்லை.பிதமாகன் திரைப்படத்தில் சூரியா விற்பாறே சராஜோ தேவி உபயோக படுத்திய படுத்திய சோப்பு டாப்பா...அதே ப்ராட் வேலைதான்.

 இதற்க்கு வழக்கு என்று போனால்  சத்யாபால் நிறுவன வீ திகளின் படி டெல்லி ஆட்சி எல்லைக்கு உட் பட்ட நீதி மன்றக்களில் மட்டுமே வழக்கு போட முடியும்.

ஏர்‌டெல்லும் மற்றும் சத்யாபால்  நிறுவனமும் இணைந்து இவ் வேலையாய் செய்துவருகிறது.

இனியும் இந்த வவுச்சரை நம்பி ஏமாறாதீர்கள் !!!
Friday, October 4, 2013
Posted by Blogger

நாகரீக கோமாளிகள்


படித்ததில் பிடித்தது

நாகரீக கோமாளிகள் :
--------------- --------------

ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.

நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்

நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.

-வை.நடராஜன்

Saturday, September 21, 2013
Posted by Blogger

'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சை-சிகரட் பிடிக்கும் நம் நண்பர்கள் அதில் இருந்து விடுபட


சிகரட் பிடிக்கும் நம் நண்பர்கள் அதில் இருந்து விடுபட 'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சையின் பகுதி

நண்பர்களே முழுமையாக படித்துவிட்டு பகிரவும், இதில் ஒருவர் திருந்தினாலயே எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்...!

என் முதல் கட்டப் பணி உங்களுக்கு சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன். இது உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரிந்து இருந்தால் நீங்கள் மிகப்பெரிய குற்றவாளி! தெரியாதவர்களை மன்னித்து விடுகிறேன்

கடவுள் நமக்கு இந்த உடலைத் தந்திருக்கிறார் வெளியே தோலும் கண்களும் மூக்கும் கை கால்களும் தெரியும் உறுப்புகள் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியும். ஆனால் என் சாண் உடம்பு தோல் போர்த்தி உள்ளே நடக்கும் விஞ்ஞான அற்புதங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்..?

முதல் உதாரணம்: நாம் சுவாசிப்பது நமக்குத் தெரியும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? நம் நுரையிரலில் என்ன நடக்கிறது அது வெளிப்படுத்தும் பொருள் என்ன? மேலே பார்க்கலாம்!.

நமது உடலின் தசைகளை புதுப்பிக்க ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் சிகப்பணுக்கள் உள்ளன. இந்த அணுக்கள் கரையக் கூடிய ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கொண்டு செல்கின்றன. இதனால் செல்கள் உயிர் பெறுகின்றன.

அது சரி இரத்தத்தில் எப்படி ஆக்ஸிஜன் கலக்கிறது? 

வியக்கப் போகிறீர்கள்...மெல்லப் படியுங்கள்... புரியும் வரை படியுங்கள்...அதுவரை நான் உங்களுக்காக காத்து இருப்பேன்... 

கடவுளின் மிகப்பெரும் கருணையில் இந்த வினை மாற்றம் நுரையீரலில் நிகழ்கிறது. நமது நுரையிரல் பஞ்சு போன்ற அல்லது ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பில் உள்ளது. நுரையிரல் வெளிக்காற்றை உட்கொள்ளும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஸ்பாஞ்சின் உள்ளே போகிறது. சிறிய சிறிய துவாரங்களின் முனைக்கு செல்லும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அங்குள்ள மிகச்சிறிய இரத்த நாளத்தின் முனையில் உள்ள ஒரு மைக்ரான் அளவுள்ள இரத்தம் உடனே தன்னுள் ஆக்ஸிஜனை கரைத்து உட்கொண்டு உடனே பறக்கிறது. பறந்து செல்லும் இந்த இரத்தம் தான் திசுக்கள் உள்ளே சென்று அதை புதுப்பிக்கிறது. 

எதற்கு இதை நான் உங்களிடம் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது......

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-

1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது. 

2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது. 

இதென்ன? தின்பவனுக்கு கண் இல்லையா? 

எனக்கு தெரியாதா? முட்டையா அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு உங்களால் சொல்ல முடியும் என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!

அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?

சவால்!!!!!!!!!!!!

3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.? 

எப்படி?

புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!. 

அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?

ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!! 

உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.....

கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.

பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!. 

திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !

ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை. 

என்னது? தாம்பத்திய உறவில் பிரச்சனையா? போய் சொல்கிறீர்கள் சார்..... எனக்கு காத்து குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம ராஜர்களே.... கேளுங்கள் .....

ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்லும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்.... உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்? 

இது தேவையா?

எங்கே இப்போதாவது உங்களுக்கு தோன்றுகிறதா? சிகரெட்டை விட வேண்டும் என்று?

ஆம் தோன்றுகிறது என்போருக்கு சபாஷ்! 

இன்னும் இல்லை என்பவருக்கு இன்னமும் பல கதைகள் இருக்கிறது. சொல்லிக் கொண்டே போவேன்...வெட்கமில்லாமல்....சிகரெட் குடிப்பதற்கு நீங்கள் வெட்கப் படவில்லை...அதன் தீமைகளையும் விளைவுகளையும் சொல்லுவதற்கு நான் என் வெட்கப் பட வேண்டும்? 

அடுத்த மிகப்பெரிய வெடிகுண்டு தலைமுறை மாற்றம்! சரியான அளவில் இரத்ததில் ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் உங்களின் உயிர் அணுக்கள் பாதிக்ப்படுகிறது.

எவ்வாறு? 

புரத சத்துக்களும் பின்னர் கண்ணிற்கும் அறிவிற்கும் புலப்படாத பல நுண்ணிய விஷயங்கள் மூலம் மனிதனின் உயிரணுக்கள் உண்டாகின்றன. ...... குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள இரத்ததில் உயிரணுக்களின் குரோமோசோம்களின் எழுதப்படும் தலைமுறை பற்றிய விவரங்களில் குறுக்கீடு ஏற்பட்டு உங்கள் குழந்தை உங்கள் டி என் ஏ விலிருந்து மாறுபட்டு ஒரு தலைமுறை உறவு விட்டு போகிறது.

அதனால் என்ன என்று கேட்கும் ஜெனடிக்ஸ் அறியா நண்பனே? ஜீன்கள் குறைந்தால் எல்லா வித நஷ்டங்களும் உனக்கில்லை .... உன்னால் பிறக்கும் குழந்தைக்குத்தான் ....என்ன வெல்லாம் நடக்கும்?

உங்கள் குழந்தை நோஞ்சானாக பிறக்கும்! சுவாச கோளாறு கண்பார்வை கோளாறு மற்றும் சில சமயங்களில் நோய் எதிர்பு சக்தி குறைந்து எடுத்ததற்கெல்லாம் வியாதி என்று எப்போதுமே நோயில் விழும் அபாயம்.!

யார் காரணம் இதற்கு? உங்கள் உடலை கெடுத்துக் கொள்வது உங்கள் உரிமை எனில் உங்களால் பிறக்கும் உயிர்க்கு நீங்கள் எப்படி தீங்கு நினைக்கலாம்?

அக்குழந்தைக்கு நல்ல கல்வியும் ஒழுக்கமும் கொடுக்க வேண்டிய தந்தையே அதன் நோய்க்கான மூலக்காரணம் என்று அதற்கு தெரிய வரும் போது உங்களின் மரியாதை என்ன ஆகிறது?

நினைத்து பாருங்கள் கையில் சிகரெட்டுடன் நீங்கள்! விந்தி விந்தி நடந்து இருமிக் கொண்டு வரும் உங்கள் மகன்! அல்லது மகள்!! 

யார் காரணம்? 

நீங்கள் இல்லையா? 

அதன் காரணம் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லையா? சைத்தான் அல்லவா இது ? விட்டுவிட வேண்டுமா இதை?

உங்களுக்கு எந்த நல்ல பயனும் இல்லை! உங்கள் தாம்பத்திய உறவு திருப்தியில்லை!! உங்கள் குழந்தை நோயுள்ள சவலைக் குழந்தை!!! காலம் முழுதும் குற்ற உணர்வுடன் உங்கள் வாழ்க்கை!!!!

கவலையாக இல்லை உங்களுக்கு?

இந்த கணமே வேண்டாம் என விட்டுவிடுங்கள்! 

அதன் பயனாக நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். கீழ் கண்டவற்றை நீங்கள் உடனே அடையலாம்.....

1. புகைப்பழக்கம் விட்ட இரண்டாவது நாளிலிருந்து உங்களின் நாவு மீண்டும் பழைய சுவையை திருப்பித்தரும்.

2. பாலின் மெல்லிய சுவையையும் மணத்தையும் அறிவிர்கள்.

3. மல்லிகைப்பூ மணம் புகையிலை மணமில்லாது நல்ல வாசம் தரும்.

4. தயிருக்கு இத்தனை சுவை உண்டா என உங்கள் மனம் வியக்கும்.

5. சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் மனம் ஆழமாக பதியும் இதெல்லாம் நீங்கள் புகைப்பதை விட்டுவிட்ட 48 மணி நேரத்தில் நடக்கும்.

ஆனால் உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது! என்னால் ஒரு மணிநேரம் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியவில்லையே என்பவர்களுக்கு!

நான் இருக்கிறேன் வழி சொல்ல!

எத்தனை பேர் என்னுடன் பயணிக்கத் தயார்?

என்னுடன் பயணம் செய்பவர்கள் அனைவரும் நிச்சயம் இதிலிருந்து விடுதலை பெறுவீர்கள் நம்புங்கள்! நிச்சயம்! உறுதி.!

புகைப்பதை நிறுத்த முடியாமல் போவதின் காரணம் என்ன ? 

சிகரெட்டில் உள்ள புகையிலையில் 'நிக்கோட்டின்' என்னும் ரசாயனம் தான். 

இது வெள்ளைக்கார துரையின் செயல்பாடு போல! நண்பன் போல முதலில் வரும், பின்னர் விருந்தாளியாகி களிக்கும், அதன் பின் உங்கள் எஜமானனாகி உங்களை அடிமை செய்யும்! 

நிகோடினும் அது போலவே செயல்படுகிறது.

முதல் முறை நீங்கள் புகை பிடித்த போது 'கிர்'ரென்று ஒரு கிறக்கம் வந்ததா? அதை போதை எனகிறிர்களா? அது போலவே ஒவ்வொரு சிகரெட்டிலும் வரும் என்று நினைத்தீர்கள் இல்லையா? 

ஆனால் அது நடக்காமல் சில நாட்கள் கழித்து காலையில் பிடிக்கும் சில சிகரெட்டிற்கு மாத்திரம் போதை தரும் சங்கதி இருந்தது இல்லையா? நாளின் மற்ற சமயங்களில் அது போல நடக்கவில்லை? கொஞ்ச நாள் கழித்து காலையிலும் அந்த முதல் சிகரெட்டும் போதை தரவில்லை இல்லையா?

ஆனால் நடந்தது என்ன முதல் முதல் குடித்த சிகரெட் உங்கள் நண்பன் போல வ்ந்து போதை தந்தது! காலையில் போதை தந்த சிகரெட் உங்கள் விருந்தாளி ஆனது! பின்னர் நீங்கள் புகைத்த அனைத்து சிகரெட்டிற்கும் நீங்கள் அடிமையாகி போனீர்கள்!. காலையில் டாய் லெட் போக உங்களுக்கு முதல் தேவை ஒரு சிகரெட்....

உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஏன் திடீரென்று ஒரு நாளைக்கு இத்தனை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தீர்கள்?


இதன் பெயர் தான் 'நிக்கோட்டின் அடிமைத்தனம்'. மருத்துவத்தில் நிகோடின் 'க்ரேவிங்' என்று கூறுவார்கள் உங்கள் உடலில் நிக்கோடின் ஒரு அளவு வரை கரைந்து உங்களுக்கு மன நிறைவை தரும் ஆனால் கரைசலின் அடர்த்தி குறையும் போது 'சிகரெட் குடி .....சிகரெட் குடி .......' என்று உங்களைத தூண்டும். 

அப்போது தான் நீங்கள் அடுத்த சிகரெட்டை தேடுவிர்கள். 

புகைத்த பின் உங்களுக்கு திருப்தி உங்களுக்கு திருப்தி அல்ல, உங்கள் ரத்தத்தில் கலந்துள்ள நிகோடின் சாத்தானுக்குத் திருப்தி! இனி அடுத்த சிகரெட் சாத்தான் உங்களிடம் கேட்கும் வரை உங்களுக்கு சிகரெட் பிடிக்க தோன்றுவதில்லை.

நோய் நாடி நோய் முதல் நாடி அதன் 
வாய் நாடி வாய்ப்பக் கொளல்' 

எனும் குறளிற்குத் தக்கவாறு நாம் சாத்தானை எதிர்கொள்ள போகிறோம். நாம் அது நம்முள் மீண்டு எழாதபடி முழு சக்தியும் பிரயோகித்து அதனை அடக்கி விரட்டப்போகிறோம். உங்கள் மனபலம் கொண்டே நீங்கள் நண்பனாய் நினைத்த விரோதியை உங்கள் கையாலேயே அடித்து விரட்டப்போகிறீர்கள். 

குடி சாத்தானே...! இதோ நாங்கள் உன்னை தொலைத்து தலைமுழுக வந்துள்ளோம் அதற்குள் எத்தனை வேண்டுமானாலும் குடித்து முடி. நீ மடியப்போகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது.


-- நன்றி  --முகநூல்
Tuesday, March 12, 2013
Posted by Blogger

இரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி

சமீபத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நக்ஸலைட்டு பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கூட்டத்திலிருந்து பிஹெச்.டி பட்ட மாணவி வில்கா என்பவர், தங்களுக்கு பேச்சு உரிமை வேண்டுமென கூச்சலிட்டார்.. காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயல, சிதம்பரம் அவரைப் பேச அனுமதித்தார். அந்தப் பெண் "மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரம் கொடுத்து உள்ளது ஏன்?. சாதாரண மக்கள் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரோம் சர்மிளா போன்ற காந்தியவாதிகள் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டது ஏன்?" என்ற கேள்விக்கு, "என்.டி.ஏ. அரசாங்கம் ஆயுதப்படைக்கு அதிக அதிகாரம் கொடுத்தார்கள், நாங்கள் அவ்வதிகாரத்தை தொடர்வதா இலலை திரும்பப் பெறுவதா என்று யோசித்து வருகிறோம்" என்றார்.

யார் இந்த இரோம் சர்மிளா என்பதை அறியும் முன்பு பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டால் நல்லது.

1949 –ல் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த சிறு சிறு அரசர்கள் ஆண்ட தன்னாட்சி பகுதிகளை அப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மதிக்காமல், இந்தியாவுடன் சேர்க்கும் பொழுது அந்தப் பகுதி மக்களிடையே மனக்கசப்பு. ஏற்பட்டது . அதுவே அப்பகுதிகளின் மக்களிடையே தனித்தனியே தனிநாடு கிளர்ச்சிக்கு வித்திட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், நாகா கிளர்ச்சி இந்தியாவின் விடுதலை காலத்திற்கும் முற்பட்டது என்றாலும் விடுதலைக்குப் பின் தனிநாடு கோரும் நாகா கிளர்ச்சி பிற வடகிழக்கு மாகாணங்களான மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் போல் பரவியது. அது பெருவியாதியாக வளர்ந்து 1980 வாக்கில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனி கிளர்ச்சி அமைப்புகள் ஏற்பட்டன.


மணிபபூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மித்திஸ்,பன்கல்ஸ்,நாகா, குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்க முடிவில், நாடு விடுதலை அடைந்தபோது, மணிபபூர் மாநிலத்தில் புதிதாக வளர்ச்சி அடைந்த நடுத்தர, படித்த மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்பினார்கள். நமது அரசியல்வாதிகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மையினால் அவர்களே மணிப்பூர் தனிநாடாகப் பிரிந்து செல்லும் கிளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தக் காரணமாக மாறிவிட்டார்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் கிளர்ச்சி அமைப்புகளை அடக்க 1958 செப்டம்பர் 11-ல் இந்தியா, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் ஒன்றை இயற்றியது . அதனை, தொந்தரவு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா,மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது. இந்த சட்டம் பின்வரும் சிறப்பு அதிகாரத்தினை ஆயுதப்படைக்கு வழங்குகிறது

1.சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள கூட்டத்திற்கு எதிராக, உயிரைப் பறிக்கும் ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தலாம். படையைப் பயன்படுத்தலாம். அந்த நடவடிக்கையில் உயிர்கள் பலி ஆகலாம்.

2.வாரண்ட் இல்லாமல் சந்தேகப்படுபவரை, ஆயுதம் வைத்திருப்போரைக் கைது செய்யலாம்.

3.எந்த இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்



இதைவிடக் கொடுமை, ராணுவ ஆத்துமீறலுக்காக ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாத வகையில் இந்த சட்டத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஷரத்து உள்ளது..இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இரோம் சர்மிளா சானு எனும் காந்தியவாதி மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இரோம் நந்த சிங் என்ற தந்தைக்கும் இரோம் சக்தி தேவி என்ற தாய்க்கும் ஒன்பதாவது கடைசிப் பிள்ளையாக 1972-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்ல வாய்ப்பு கிடைக்காததால் பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பாடங்களைப் படித்து பட்டயம் பெற்றார்.

2000 ஆண்டு நவம்பர் 1 அன்று , மணிப்பூர் மாநிலத்தில் மலோம் எனுமிடத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர் .இந்திய அரசின் பாரா மிலிட்டரியின் ஒரு படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ், தங்களது வாகனத்தில் வந்து இறங்கி, பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது எந்த எச்சரிக்கையும் எந்தக் காரணமும் சொலலாமல் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள் .அந்த துப்பாக்கிச் சூட்டில் 10 நபர்கள் பலியானார்கள். அவர்களில் 62 வயதான மூதாட்டியும், 1988 –ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை பட்டம் வாங்கிய 18 வயதான சீனம் சந்திரமணியும் அடங்குவார்கள். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட மணிப்பூர் மக்கள் அன்றே தெருவுக்கு வந்து நடந்த நிகழ்வின் மீது நீதிவிசாரணை வேண்டுமென்று போராடினார்கள். ஆனால் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958 னைப் பயன்படுத்தி அரசாங்கமும் ராணுவமும் விசாரணை கமிஷன் அமைப்பதில் இருந்து தப்பித்துக் கொண்டன.

தனிச்சுற்றுக்கு விடப்பட்ட குறுந்தகடு ஒன்றில் குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்கள், வயதானவர்கள் ஆகியோரைத் தெருவுக்கு இழுத்து வந்து, கண்ணீர்ப் புகை குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், ஆண்களை மண்டியிட வைத்து, தலைக்கு மேல் துப்பாக்கியினை வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றன.

மலோம் நிகழ்வால் மனம் புழுங்கிய இரோம் சர்மிளா தனது 28வது வயதில், 2000ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தனது தாயினை வணங்கி அவரது வாழ்த்துடன் மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தின் அடக்குமுறைக்கு மூலகாரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை மகாத்மா காந்தி வழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.இவருடைய உண்ணாநிலையினை முதலில் சிலர் கிணடலும் கேலியும் செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தனது உண்ணாநிலையினைத் தொடர்ந்தார் சர்மிளா. அவர் உண்ணாநிலை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 6 ஆம் நாள், இந்திய தண்டனைச் சட்டம் IPC பிரிவு 309யின் படி சர்மிளா தற்கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு, பின்பு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அந்நிலையிலும் சர்மிளா உண்ணாநிலையினைத் தொடரவே, காவலில் இருக்கும்போது அவர் இறந்து விடக்கூடாதே எனும் பயத்தில் விட்டமின் போன்ற சத்துப் பொருட்களை கரைத்த நீரை அவரது மூக்கு வழியாக ஒரு குழாயைப் பயன்படுத்தி அவரது விருப்பததுக்கு மாறாக ஊற்றி அவரை உயிரைப் பிடித்து வைக்கிறார்கள். இந்திய தண்டனை சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான வழங்கவியலும் என்பதால் அவரை அரசு விடுதலை செய்வதும் உடனே சர்மிளா தனது உண்ணாநிலையினைத் தொடர்வதும் மாறிமாறி நடந்துவருகின்றன.

அவ்வாறு சர்மிளா ஒரு தடவை மணிப்பூர் அரசால் விடுதலை செய்யப்பட்டபோது, அவர் சில அமைப்புகளின் உதவியுடன் மணிப்பூர் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புது தில்லிக்கு வந்தார். தில்லியை அடைந்தவுடன் முதல் வேலையாக தனது குருவான மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டை அடைந்து, அண்ணலுக்கு மலர் மாலை வைத்து தனது மரியாதையினைச் செலுத்தினார். அன்று மாலையே ஜந்தர்மந்தரிலிருந்து தனது அகிம்சா போராட்டத்தை தொடாந்தார். மெல்லிய குரலில் இந்தப் போராட்டம் ஆயதப் படை சட்டத்திற்கான தனது எதிர்ப்பை தெரிவிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் நடத்துவதாக சர்மிளா கூறினார். அவர் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்வீரர்கள் ஆகியோர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். தில்லி அரசு விழித்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாக அன்று நள்ளிரவில் சர்மிளாவைக் கைது செய்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. எய்ம்ஸ் மருத்துவமணையில் சர்மிளா கிகிச்சை காவலில் இருக்கையில் அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்ற அமைப்பைச் சார்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான மிஸஸ். இபடி (Ms.Ebadi)என்பவர் சர்மிளாவைச் சந்தித்தார். சர்மிளாவின் போராட்டத்திற்கு அவரது ஆதரவைத் தெரிவித்தார்.மேலும் சர்மிளா இறந்துவிட்டால் நாடாளுமன்றம், நீதிமன்றம், ராணுவம், நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஒவ்வொரு பத்திரிகையாளரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததால் அவரது இறப்புக்கு காரணமானவர்களாகக் கூடும் எனவும் தெரிவித்தார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் பத்தாவது ஆண்டாக அவரது உண்ணாநிலை தொடர்கிறார். அவர் தனது கூந்தலைப் பின்னி முடிப்பதையும் விட்டு விட்டார். பற்களைப் பருத்தி துணியால் துடைத்து கொள்கிறார். உதட்டை ஸ்பிரிட் கொண்டு துடைத்துக் கொள்கிறார். தினமும் 4 லிருந்து 5 மணி நேரம் தானே கற்றுக் கொண்ட யோகாவை மேற்கொள்கிறார். யோகா மூலம் அவரது உடலையும் மனதையும் ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவதாகவும் சொல்கிறார். தொடர்ந்து உண்ணாமல் இருப்பதால் அவருக்கு மாதவிடாய் சுழற்சிகூட சீக்கிரமாக நின்றுவிட்டது. இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் சர்மிளா பத்து ஆண்டாக உண்ணாநிலை மேற்கொண்டு உயிர் வாழ்வது மருத்துவ உலகில் பெரும் அதிசயம் என கூறுகிறார்கள். சர்மிளா தன்னை வந்து காண்பவர்களிடம் தான் சாதாரணமாக இருப்பதாகவும் தான் அவரது உடம்புக்கு எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை எனவும் .இது தண்டனையும் இல்லை, தனது கடமையைத்தான் செய்வதாகவும் நாளை என்ன நடக்கும் என்று தனக்குத் தெரியாது எனவும், நேரம் தவறாமை, ஒழுக்கம், பெரும் முயற்சி பெரும் வெற்றியைத் தரும் என தனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டதாக சர்மிளா கூறுகிறார்.

சிறுசிறு குற்றங்களைச் செய்த ஒரு குற்றவாளியைப் போல் இம்பால் மருத்துவமனையில் அழுக்கு குப்பைக்கூளமான ஒரு மருத்துவ வார்டில் சத்துநீர் அனுப்ப மூக்கில் குழாய் சொருகப்பட்ட நிலையில் அரைஉயிராய்க் கிடக்கிறார் இரோம் சர்மிளா சானு. சட்டத்தில் எந்த அதிகாரமும் நியாயமும் இல்லாவிட்டாலும் இவரைக் காண யாரையும் மணிப்பூர் அரசு அனுமதிப்பதில்லை.

சர்மிளாவை பற்றி திரைப்படம் எடுக்கும் கவிதா ஜோஷி என்பவர், சர்மிளாவின் தாயாரைப் பேட்டி கண்டபொழுது, அப்போது அவரது தாயார், சர்மிளாவை பார்த்தால் அவர் அழுதுவிடுவார் என்றும் . சர்மிளாவின் கோரிக்கை நிறைவேறும் வரை அவளது உண்ணாநிலையை அவள் கைவிடப்போவதில்லை என்றும், 5 நாட்களுக்கு மட்டுமாவது இந்தக் கொடுமையான ஆயுதப்படை சட்டம் விலக்கிக் கொண்டால்கூட அவரது மகள் சர்மிளாவுக்கு ஸ்பூன் மூலம் கொஞ்சம் அரிசி கஞ்சி கொடுப்பேன்.அதற்குப் பின் சர்மிளா இறந்து போனால் கூட அவளது ஆசை நிறைவேறியதே என்ற நிம்மதியாவது அடைவேன் என்று தெரிவித்து உள்ளார்.

2005 –ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கெளஹாத்தியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு சர்மிளாவின் பெயரைப் பரிந்துரைத்தது. 2007ஆம் ஆண்டு, தென் கொரிய நாட்டு கெவஞ்சு மனித உரிமை பரிசினைப் பெற்றார். (Gwangju prize for Human Rights,). 4.10.2010 ல் சர்மிளா ஆயுதப் படை சட்டத்திற்கு எதிரான உணணாநிலை போராட்டம் தொடங்கி பத்தாவது ஆண்டு நிறைவுக்கு வருவதைச் சிறப்பிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு, சர்மிளாவின் பெயரை இந்திய அறிவியல், பகுத்தறிவு மற்றும் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தடைசெய்யபட்ட மக்கள் விடுதலை படை(People liberation Army) உறுப்பினர் என்று சொல்லப்பட்ட 32 வயதான மனோரமா தேவி என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைது சென்று அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் கழிதது, மனோரமா தேவியின் உடல் இம்பால் நகரின் குப்பை கொட்டும் இடத்தில் கற்பழிக்கப்பட்டு ரத்தக்காயங்களுடன் கிடந்தது. இதனைக் கண்டு பெரும் கோபத்திற்கு உள்ளான 30க்கும் மேற்பட்ட சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் 2004 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் அமைந்துள்ள கன்கலா கோட்டை எதிரே குழுமி தங்களது ஆடைகளைத் துறந்து அம்மண நிலையில் "இந்திய ராணுவமே, எங்களைக் கற்பழி " என்று கூச்சலிட்டவாறு போராடினார்கள். மணிப்பூர் அரசு உடனே அவர்களைக் கைது செய்து, மூன்றாண்டு சிறைத்தண்டனை வாங்கித் தந்தது. மனோரமா தேவி கொலையினை விசாரிக்க அமைக்கப்பட்ட உபேந்திரா விசாரனை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை இன்னும் மக்கள் அறிய வெளியிடவில்லை.

மனோரமா தேவியின் மரணம், சர்மிளா சானுவின் சாகும வரையிலான உண்ணாநிலை போன்றவை மத்திய அரசைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன்ரெட்டி அவர்களின் தலைமையில் ஆயுதப்படை(சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958னை மறுஆய்வு செய்ய கமிஷன் ஒன்று அமைத்தது. சூன் 6, 2005-ல் அந்த கமிஷன் தனது அறிக்கையினை வெளியிட்டது. ஆனால் கமிஷனின் அறிக்கையின் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அவ்வமயம் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப்முகர்ஜி ஆயுதப்படைக்கு இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரமில்லை என்றால் தொந்தரவான பகுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்கவியலாது என்று கூறினார். டிசம்பர் 2006-ல் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மணிப்பூர் மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று ஜீவன் ரெட்டி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகளை மதிக்கும் வகையில், ஆயுதப்படை சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையர் திரு நவநீதம் பிள்ளை ஆயுதப் படை (சிறப்பு அதிகார சட்டம்) 1958, காலனி ஆதிக்க கால சட்டம் போன்றது. சர்வதேச அளவில பேணப்படும் மனித உரிமை தரத்துக்கு இது முரண்பாடானது என தெரிவித்து உள்ளார்.

இன்று வரை உள்துறை அமைச்சர் இச்சட்டததை நீக்குவதா அல்லது திருத்தம் கொண்டு வருவதா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஒரே ஆறுதலான நிகழ்வு என்னவென்றால் மத்திய அரசின் எதிர்ப்பினையும் மீறி, மணிப்பூர் அரசு, மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958 யினை விலக்கிக் கொண்டது.

அண்ணலால் விடுதலை அடைந்த மக்களாட்சி நடக்கும் இந்தியத் திருநாட்டில், மகாத்மா காந்தி காட்டிய அகிம்சா வழியில் சர்மிளா போராடினாலும் அவர் இம்பால் மருத்துவமனை வார்டில் முடங்கிக் கிடக்கத்தான் வேண்டி உள்ளது. நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலிம் ( ஐசக் மற்றும் முய்வா) இயக்கத்தின் கோரிக்கையான "கிரேட்டர் நாகாலாந்து" கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசு செவி சாய்த்து உள்ளது போல், இரோம் சர்மிளாவின கோரிக்கையான மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சட்டம், இரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் 10 ஆண்டு நிறைவு செய்வதற்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என வாழ்த்துவோம்.
நன்றி - உயிர்மை
 சார்மிளாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

வளர்ந்துவரும் உலக பொருளாதார மயமாக்கல் தான் அரசுக்கு முக்கியம் போல, அதற்காக நாட்டை கம்யூனிஸமாக்க சொல்லவில்லை, முதலாளிதுவமும் விரும்பத்தக்கதல்ல, ஒவ்வொரு மனிதனும் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு உலகில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி உயிர்மை

சார்மிளாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

Tuesday, May 1, 2012
Posted by Blogger

மீண்டும் டெசோ -கருணாநிதி வீரவசனம்


இதோ இன்னும் ஒரு எடுத்துகாட்டு ...

தமிழ்நாட்டில் 1980களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது

சீமானை தவிர வேறு ஒருவரும் இதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்கவில்லை 

தமிழனின் வீரம் அரும்காட்சியகத்தில் வைத்து பூட்ட பட்டதை நன்கு தெளிவு படுத்துகிறது 

ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழகர் மாண்டு கொண்டு இருக்கும்  போது பத்து நிமிடம் உண்ணாநிலை இருந்தவர் தானே?


அப்போது ஆரம்பிக்க வேண்டியது தானே?

இப்பொழுது மட்டும் எங்கிருந்து தமிழ் உணர்வு பொங்கி கொண்டு வந்தது?   

இது புதுகோட்டை தேர்தலுக்கு ஆயத்தமோ? 
  
Saturday, April 28, 2012
Posted by Blogger

யார் இந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்





கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் (வயது 32), சொந்த ஊர் வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரம்.இவரது தந்தை ஏ.வரதாஸ். ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். தாய் கங்காதேவி. இவர்கள் பாளை தியாகராஜநகர் அருகே உள்ள ராம்நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். அலெக்ஸ் பால் மேனனின் தங்கை மெர்லின் ஜுலியட். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் பாளையை சேர்ந்த புஷ்ப பாக்கியம் என்ற ஆஷா என்பவருக்கும் அலெக்ஸ் பால் மேனனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இருவரும் சத்தீஸ்கரில் வசித்து வந்தனர். ஆஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அலெக்ஸ் பால் மேனனின் தாய் கங்காதேவி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியவர். தனது மகனையும் கலெக்டர் ஆக்கி ஏழைகளுக்கு சேவை செய்ய வைக்க வேண்டும் என எண்ணியிருந்தார். இதை அடிக்கடி தனது மகனிடம் கூறுவாராம். இந்த நிலையில் அலெக்ஸ் பால் மேனன் 10-ம் வகுப்பு படிக்கும் போதே தாய் கங்காதேவி இறந்து விட்டார்.


தாயின் கனவை நனவாக்க கலெக்டர் ஆகி சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பால் மேனன் தீவிரமாக படித்தார். பாளை ரோஸ்மேரி மெட்ரிக்பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த அலெக்ஸ் பால் மேனன் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு முடித்தார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதலில் ஐ.ஆர்.எப். தேர்ச்சி பெற்றார். 2006-ம் ஆண்டு ஐ..எஸ்.தேர்வு எழுதி தமிழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவரது சிறப்பான பணிக்காக மாநில அரசிடம் இருந்து 3 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்க மனமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர் அலெக்ஸ். திரைப்படங்கள் மீது நல்ல ஆர்வம் கொண்டவர். ஜப் வி மெட், ஹோலி ஸ்மோக், சுப்பிரமணியபுரம் ஆகியவை இவர் ரசித்துப் பார்த்த சில படங்களாம்.மக்களுக்கு உதவாத சட்டங்கள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் கூட இவர் விரக்தியுடன் எழுதியுள்ளார். கலை, திரைப்படம், இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லீனா மணிமேகலையும், சாரு நிவேதிதாவும்.


இவரது பெயரைப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் சட்டென புரிபடும். அதுதான் இவரது பெயருடன் இணைந்துள்ள மேனன். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எனக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு்த்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணன் மேனன் மீது நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் எனது மகன் பெயரில் மேனன் என்ற பெயரைச் சேர்த்தேன் என்றார்.
அலெக்ஸ் பால் மேனனுக்குப் பிடித்த ஒரு மிகப் பெரிய போராளி - சேகுவரா. மாவோயிஸ்டுகள் போன்றோருக்கும் கூட சேர மிகவும் பிடித்தவர்தான்..


அப்படிப்பட்ட ஒரு கலக்டர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால்  கடத்தப்பட்டார்.இதை கண்டித்து சுக்மா மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தபட்டது


இவர் ஏன் கடத்தப்பட்டார்? .நல்லது செய்தார்.என்னது அது?

அரசின் பல திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.மக்களுக்கு கல்வி அறிவு புகட்டினார்.இதனால் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு மக்களிடையே சரிந்தது.
இவரை போல் நல்ல கலக்டர் நாட்டிற்கு மிக அவசியம்.மத்திய-
மாநில அரசே போர்கால நடவடிக்கை எடு.




Sunday, April 22, 2012
Posted by Blogger

Popular Post

- Copyright © 2013 கல்யாணகுமார் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -